வெள்ளி, 18 டிசம்பர், 2020

கிண்ணியாவில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த 
வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கல்முனை கடற்கரையில் தலைமறைவாகியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனை
 செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும், குற்றவாளிக்கு 75,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 18 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார்.கிண்ணியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி 13 வயதான சிறுமி 50 வயது 
நபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது பிரதிவாதி தலைமறைவாகினார்.எனினும், பிரதிவாதியின்றி வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.துஷ்பிரயோகத்திற்கு 
உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ளதுடன், மேற்கொள்ப்பட்ட மரபணு பரிசோதனையில் பிரதிவாதியே குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக 
அரச இரசாயன பகுப்பாய்வாளர் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.இதன் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதியை
 குற்றவாளி என அறிவித்து நீதிபதி 
மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.பொலிஸ் மா அதிபரின் நேரடி பணிப்புரையில், உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கல்முனையில் தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கொழும்பில் பல பகுதிகள் முடக்கம் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு, கிரான்பாஸ் சிறிசந்த செவன வீடமைப்பு பகுதி, கிரான்பாஸ் சிறிமுது உயன, மாளிகாவத்தை லஹிரு செவன வீடமைப்பு பகுதி, பொரளை சிறிசர உயன ஆகிய பகுதிகளில்.14-12-20. நாளை அதிகாலை முதல் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பின் ஏனைய 17 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், வெள்ளவத்தை மயூரா ப்ளேஸ் பகுதி.14-12-20. நாளை அதிகாலை முதல் முடக்கப்படவுள்ளது.
கம்பஹா – வத்தளை பொலிஸ் பகுதியில், ‘கெரவலப்பிட்டி, ஹெக்கித்த, குருந்துஹேன, எவெரிவத்தை, வெலிகந்தமுல்லை, பேலியகொடை பொலிஸ் பகுதியில் பாத்திய’ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நாளை (14) முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளது.
அதேவேளை, கம்பஹாவின் ஏனைய 7 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், ‘வத்தளை பொலிஸ் பகுதியில் நைனாமடு, டூவே வத்த, பேலியகொட பொலிஸ் பகுதியில் ரோஹன விஹார மாவத்தை, 
கிரிபத்கொட பொலிஸ் பகுதியில் வெடிகந்தை, நிட்டம்புவ பொலிஸ் பகுதியில் திஹரிய வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் வரன ஆலய வீதி, கொத்தொட வீதி, ஹிரிந்த மாவத்த ஆகிய பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளது.
களுத்துறை – வெகனகல் கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், மரிக்கார் தெரு ஆகிய பகுதிகளும் நாளை முதல்
 முடக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இபலோகம விஜிதபுர கோட்டை மதிலுக்கு சேதம் 10 பேர் கைது

அநுராதபுரம் – இபலோகம விஜிதபுற கோட்டை இருந்ததாக கருதப்படும் தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.
பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுத்தமையினால், அங்கிருந்த தொல்பொருள் பகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இபலோகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அழகப்பெருமாகமயில் உள்ள பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக இந்த மதில் கட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொல்பொருள் தொகுதிக்கு 
சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுள் பள்ளிவாசலின் தலைவரும் அடங்குவதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 3 டிசம்பர், 2020

தற்போதுவரை யாழில் எட்டாயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுவரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.03-12-20.
இன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் சூம் தொழில்நுட்பம் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகேசன் இவ்வாறு தெரிவித்துளார்.
மேலும்,
யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் மகேசன் 
தெரிவித்துள்ளார்.
யாழ்  தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர்வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 1 டிசம்பர், 2020

இலங்கை போர்குற்றம் தொடர்பான பிரித்தானிய கூலிப்படையின் விசாரணை ஆரம்பம்

பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை நிறுவனம் 1980ம் ஆண்டு கூலிப்படையாக வந்து இலங்கையில் புரிந்த போர் குற்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய மெட்ரோபோலிரன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கீனி மீனி சேவையின் படைகள் 1980ம் ஆண்டு தமிழ் இயக்கங்களுக்கு எதிராக போரிட இலங்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு இராணுவ பயிற்சியளித்தது.
அக்காலப்பகுதியில் அதிரடிப்படையினர் தமிழர்கள் பலரை படுகொலை செய்தனர்.
இந்நிலையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூலிப்படைகள் அல்லது தனியார் இராணுவ படைகளுக்கு எதிராக விசாரணைகளை பிரித்தானியா முன்னெடுப்பது இதுவே முதல்
 முறையாகும்.
கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை தொடர்பான ஈடுபாட்டை பற்றிய ஆதாரங்கள் பிரித்தானிய அரச ஆவணங்கள் மற்றும் ஊடகவியலாளர் பிலிப் மில்லர் சமர்ப்பித்த கோரிக்கை ஆவணங்களில் இருந்தும் 
பெறப்பட்டுள்ளது.
கீனி மீனி என்ற பெயரில் போர் குற்றங்களுடன் தப்பித்த பிரித்தானிய கூலிப்படைகள் தொடர்பான நூலை ஊடகவியாளர் மில்லர் ஜனவரியில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அரசு திட்டமிட்டு வடக்கு வைத்தியசாலைகளை புறக்கணிக்கிறது. வினோ


அரசியல் காரணங்களுக்காகவும், மாகாண சபைக்கு கீழான நிர்வாகத்தில் இருப்பதாலும் வடக்கு வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில்.01-12-20. இன்று  இதனை 
தெரிவித்தார். மேலும்,
“வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசினால் 350 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விபத்து 
சிகிச்சை பிரிவிற்கான அதி நவீன கட்டிடப் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை.
33 மாடிகளைக் கொண்ட அச்சிகிச்சைப் பிரிவின் கீழ்தளம் மட்டும் முடிவுற்ற நிலையில் அவசர அவசரமாக கடந்த
 வருடம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அவசர சிகிச்சைப் பிரிவிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மீதி நிதிக்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மாகாண சபைக்கு
 கீழான நிர்வாகத்தில் இருப்பதனாலும் அரசியல் காரணங்களுக்காகவும் திட்டமிட்டே இந்நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதாகவே 
நாம் கருதுகின்றோம்.
இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களை சொல்லிக்கொண்டிருப்பதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மேல் தள வேலைகள் முடிவுறுத்தப்படாதமையினால் கீழ்தளத்துக்கு நீர் கசிவு கூட ஏற்பட்டு 
நோயாளிகளை சீராக பராமரிக்கவோ, சிகிச்சையளிக்கவோ முடியாதுள்ளது. எனவே 350 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கான மிகுதி நிதியை சுகாதார அமைச்சர் உடனடியாக விடுவித்து இரண்டாம் கட்ட கடுமான ப்பணிகளை நிறைவ செய்து தர வேண்டும்.
அது மட்டுமன்றி வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையும் சட்ட வைத்திய அதிகாரி அறையும் மிகவும் பாழடைந்த நிலையிலேயே உள்ளன. இவற்றை நவீனப்படுத்த மத்திய 
அரசிடம் நிதிக்கான கோரிக்கைகள் தொடர்ந்தும் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை.
 இதற்கு தேவையான அண்ணளவு 
மதிப்பீடான 120 மில்லியன் ரூபா நிதியினை வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாகாண பொது சுகாதார ஆய்வு கூடத்துக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டத்துக்கான நிதியையும் விடுவித்துக்கொடுக்க வழியேற்படுத்த வேண்டும். வவுனியாவிலுள்ள
 பிரதேச வைத்தியசாலைகளான 
பூவரசங்குளம், நெடுங்கேணி, செட்டிகுளம் வைத்தியசாலைகளில் உட்கட்டுமான அபிவிருத்திகளையும் அடுத்த 
ஆண்டில் செய்து கொடுக்க நிதி ஒத்துக்குமாறும் சுகாதார அமைச்சரைக் கோருகின்றேன். வடக்கு மாகாண நிர்வாகத்துக்குரிய வைத்தியசாலைகள் என்பதனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டாம் எனவும் கோருகின்றேன்.
இதேவேளை சுகாதாரத்துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு உள்ளது. மாவட்ட வைத்தியசாலையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் கூட இங்குள்ள
 மாவட்ட வைத்தியசாலைக்கு கிடையாது. அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இல்லாத ஒரு மாவட்ட வைத்தியசாலையாகவே
 இது உள்ளது.
பொது மருத்துவ சிகிச்சைப்பிரிவில் குறைந்த பட்சம் 6 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே நிரந்தர சேவையில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 60 வைத்திய அதிகாரிகளில் 32 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான 
மருத்துவ ஆளணி 129 ஆக இருக்கின்ற நிலையில் 71 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். வைத்திய நிபுணர்களுக்கான 
அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 18 ஆக இருக்கின்றபோதும் 8 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே
 இருக்கின்றார்.
குழந்தை வைத்திய நிபுணர்கள் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் எவருமே இல்லாதுள்ளனர். மகப்பேற்று நிபுணர், சத்திரசிகிச்சை நிபுணர், கதிரியக்க நிபுணர்கள் இல்லை. போதிய அம்புலன்ஸ்களும் இல்லை. இதே நிலைதான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும் உள்ளது.
2013ம் ஆண்டின் பின்னர் ஆளணி மீளாய்வு
 செய்யப்படவில்லை. வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆளணி மீளாய்வு செய்து அனுப்பிய போதும் சுகாதார
 அமைச்சு கவனம் எடுக்கவில்லை. அரசியலில் ஈடுபட்ட வைத்தியர்கள் பலர் இன்று அரசியலிலும் இல்லை வைத்தியத்துறையிலும் இல்லை .இவ்வாறானவர்களை மீளவும் வைத்திய சேவையில் இணைப்பதன் மூலம் வெற்றிடங்களை நிரப்ப முடியும்” – என்றார்¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 28 நவம்பர், 2020

வெதுப்பகமும் ஒரு புடவை வியாபார நிலையம் யாழில் முடக்கம்

யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று
 வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியான 
நடவடிக்கையாக யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்று மறு அறிவித்தல் வரை இன்று பிற்பகல் முதல் மூடப்பட்டது. அதன் முன்பக்க வாயிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வெதுப்பகத்தை
 இயக்கி உற்பத்திப் பொருள்களை மாற்று வழியூடாக விநியோகிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நவம்பர் 21ம் திகதி வெதுப்பக விற்பனையகத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் தனிப்படுதலுக்கு 
உள்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள புத்தக நிலையமும் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று வீடுகளுக்கு 
அவர் சென்று வந்த நிலையில் அங்குள்ள குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 7 நாள்களின் பின் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேற்று 
அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ 
அதிகாரி தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






வெள்ளி, 27 நவம்பர், 2020

புத்தளத்தில் 1067 கிலோ மஞ்சள் புத்தளத்தில் மீட்பு


கடற்படையால் புத்தளத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 25-11-20.அன்று. 1067kg எடையுள்ள 
உலர்ந்த மஞ்சள் மற்றும், சந்தேகநபர் ஒருவரும் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம்-மன்னார் சாலையில் உள்ள 02 வது மைல் கல்லில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது,
 வடமேற்கு கடற்படை கட்டளை இந்த பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த உலர்ந்த மஞ்சளை கண்டுபிடிக்க முடிந்தது. 1067 கிலோ 
எடையுள்ள மஞ்சள் 25 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ரகுமான் நகரில் 04 வது மைல் போஸ்டில் இருந்து ஒரு சந்தேக நபரும் கடற்படையால் 
கைது செய்யப்பட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 24 நவம்பர், 2020

கம்பஹா வத்தளையில் ஆலய வீதி வீட்டுத் தொகுதி முடக்கம்

கம்பஹா – வத்தளை ஆலய வீதிப் பகுதியில் உள்ள தொழிலாளர் வீட்டுத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.
அங்கு 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

சட்டத்தரணிகளுக்கு எதிராக யாழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித்துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு 
எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அதனால் இந்த 
வழக்கை குப்பைத் தொட்டியில் மன்று போட வேண்டும் அல்லது வழக்குத் தொடுனர் அதனை மீளப்பெறவேண்டும்”
இவ்வாறு பொலிஸாரால் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட சட்டத்தரணிகளில் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை 21ம் திகதி தொடக்கம் 29ம் திகதிக்கு இடையே இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் 
கீழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை
 நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், பொ.கஜேந்திரகுமார், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா 
பார்த்திபன், மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதில் 4வது பிரதிவாதியான தன் சார்பில் முன்னிலையாகி முன்வைத்த ஆட்சேபனையின் போதே குறித்த சட்டத்தரணி மேற்கண்டவாறு மன்றுரைத்தார். மேலும்,
பொலிஸார் இந்த மனுவில் என்னையும் ஏனைய சட்டத்தரணிகளையும் குற்றச் செயலில் ஈடுபடவுள்ளனர் என்று குறிப்பிட்டு பிரதிவாதிகளாக இணைத்துள்ளனர். பொலிஸார் குறிப்பிட்டுள்ள 
நீதித்துறை சார்ந்த பலர் இன்றைய தினம்
 மேல் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகியவர்கள். பொலிஸார் இப்படி நடந்துகொண்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டத்தரணிகள் எவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாவார்கள்.
நான் மூத்த சட்டத்தரணியாகவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு 
மேலாக ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் உள்ளேன். நான் குற்றச்செயலில் ஈடுபடுவேன் என்று பொலிஸாரால் இந்த
 மன்றுக்கு எவ்வாறு விண்ணப்பம் செய்ய
 முடியும். யாராவது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிக் கூண்டில் ஏறி நான் குற்றம் செய்யப்போகின்றேன், சமாதானத்துடன் வாழும் மக்களிடம் குழப்பத்தை
 தூண்டிவிடப் போகின்றேன் என்று சாட்சியமளிக்க
 முடியுமா? அந்தத் திராணி யாருக்காவது இருக்கின்றதா? பொலிஸ் சீருடைய அணிந்து வந்து எங்களை முட்டாள்கள் 
ஆக்காதீர்கள்.
யாழ்ப்பாணம் கச்சேரியில் நடந்த கூட்டங்கள் பொலிஸாரின் கண்ணுக்குத் தெரியவில்லையா? நாம் கொரோனா நோய் பரவலுக்கு ஏதுவாக சட்ட திட்டங்களை மீறப்போகின்றோம் என்று 
பொலிஸார் விண்ணப்பம் செய்கின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் அமைச்சர்கள் வருகை தந்து 
ஒரு மண்டபத்துக்குள் 250 பேருக்கு மேல் அமர்ந்திருக்க கூட்டங்கள் நடத்தப்பட்டன. 
அந்தக் கூட்டங்கள் பொலிஸாரின் கண்களுக்குத் தெரியவில்லை. அந்தக் கூட்டங்களுக்கு நானும் சென்றிருந்தேன். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிவிட்டேன் என்று என்னை இன்று வரை 
பொலிஸார் கைது செய்யவில்லை” என்றும் அந்த சட்டத்தரணி
 மன்றுரைத்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

சஜித்தணி எம்பி மீன்களை வாங்க வலியுறுத்தி பச்சையாக கடித்தார்

நாட்டில் கொரோனா தொடர்பான அச்சம் இல்லாமல் மீன்களை மக்கள் வாங்க வேண்டுமென ஊடக சந்திப்பில் தெரிவித்த, 
சஜித்தணி எம்பியும் முன்னாள் மீன்பிடி இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதாராச்சி மீன் ஒன்றை பச்சையாக கடித்து காண்பித்தார்  
சஜித்தணி எம்பி

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் உத்தரவை மீறிய 95 பேர் ட்ரோன்களின் கண்காணிப்பால் கைது

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம் ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமை உத்தரவை மீறிய 95 பேர்.17-11-20. இன்று கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ட்ரோன்களின் விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 15 நவம்பர், 2020

யாழ் வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி

 வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில்
 முடிவுகளின் படி
1,குகதாசன் விதுசாந் 194
2,வரதீஸ்வரன் அபிராமி 184
3ம்,கேதீஸ்வரன் துஷாரா 181
4.உமாகாந்தன் பிறேமகாந் 180
5,பகீரதன் டர்சிகா 180
6,செல்வகஜானன் பிரசாயினி 173
7,உதயரூபன் பிரவீனா 171
8,விஷ்வநாதன் அபிசேகா 168
9,புவனேந்திரன் கிஷானா 162
10,ஸ்ரீசங்கர் அபிஷா 162
அனைத்து மாணவர்களுக்கும் 7இந்த இணையத்தின் 
 வாழ்த்துக்கள்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

சனி, 14 நவம்பர், 2020

அனைவர்க்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்14.11.20

 உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு 
நாள் நல் வாழ்த்துக்கள்..
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது 
அன்பு இணைய.
உலக தமிழ் அனைத்து என் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள் அனைவர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம் .நிலாவரை.கொம் இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேசங்களில் வாழும் அனை வரும்
கொண்டாடி மகிழ்வார்.
ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான்.
மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்…
வாழ்கவளமுடன்

நிலாவரை.கொம் செய்திகள் >>>





புதன், 11 நவம்பர், 2020

இம்பசிட்டி பகுதியில் 3கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

யாழ்  பருத்தித்துறை இம்பசிட்டி பகுதியில்   கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் 
11-11-20..இன்று மாலை  சந்தேக நபர் ஒருவர் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 335 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன 
கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார்
 தெரிவித்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


நாட்டில் திடீரென அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்கள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.
இதன்படி ஆகக்குறைந்த கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் 
அமுனுகம கூறினார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>>

நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மறியல்

யாழ் தென்மராட்சி – கரம்பகத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும் விடுதி உரிமையாளரையும் எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த பெண்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 நவம்பர், 2020

நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்க -கல்வி அமைச்சு ஆலோசனை

நாட்டில் எதிர்வரும் 27ம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பில் 
கல்வி அமைச்சு ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆராயப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு காய்ச்சியவர்கள் மடக்கிப்பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, மதுபான விற்பனையில் ஈடுபட்ட 15பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி 
எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
போதையற்ற நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் பல்வேறு சுற்றிவளைப்புகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
நேற்று (8) மாலை வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெருமளவு கோடா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கிரான், கச்சக்கொடி, களுவண்கேணி, வாழைச்சேனை, செட்டிபாளையம் பகுதியில் கசிப்பு விற்பனை,
சட்ட விரோத கள் விற்பனை
 மற்றும் கசிப்பு உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக     எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 4 நவம்பர், 2020

சுதுவெல்ல பகுதியில் ஊரடங்கு அமுலில் உள்ள இரவு நேரத்தில் வீடொன்றில் நடந்த கூத்து

இலங்கையில் ஜா-எல – சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள பகுதியில் மதுபான விருந்தொன்று இடம்பெற்றுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள ஜா-எல – சுதுவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலே இந்த மதுபான விருந்து நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த மதுபான
 விருந்தில் ஈடுபட்டிருந்த 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 3 நவம்பர், 2020

மொனராகலை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் கைதி பலி

மொனராகலை சிறைச்சாலையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையில்03-11-20. இன்று மதியம் ஏற்பட்ட மோதலில் மெஸ்ஸா என அழைக்கப்படும் கைதி கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் 
தகவல்கள் தெரிவிக்கின்றன
கைதிகளுக்கு இடையிலான மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் ஒரு அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் காரணமாக சிறை கைதிகளுக்கு
 மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் மொனராகலை 
சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.சிறைச்சாலைகள் திணைக்களமும் மொனராகலை சிறைச்சாலை அதிகாரிகளும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 2 நவம்பர், 2020

நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் மக்களின் சுகாதார விதி மீறல் குறித்து கோரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் இரு முக்கிய சந்தைகளான திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பொது சந்தைகள் முடக்கப்பட்ட பின்னரும் வீதியோரங்களில் மரக்கறி மற்றும் மீன் வியாபாரங்களில் ஈடுபடும் வியாபார இடங்களில் மக்கள் சமூக இடைவெளிகள் எதுவும்
 இல்லாது முண்டியடிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதுசுதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,“இச்செயற்பாட்டை தவிர்க்குமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபாரங்களினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம், அவ்வாறு சுகாதார நடைமுறைகளினை
 பின்பற்றாத வியாபரிகள் வியாபரத்திற்கு சபை உடனடி தடை விதிக்கும் என்பதனையும் தெரியப்படுத்துகிறோம்.” என்றும் அந்த உறுப்பினர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 31 அக்டோபர், 2020

நாட்டில் திருமண வைபவங்களை நடத்தலாமா பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கம்

மேல் மாகாணத்திற்கு வெளியே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருமண வைபவங்களை நடத்த முடியும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் 
ரோஹண குறிப்பிட்டார்.
வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படும் என்றும் 
குறிப்பிட்டார்.
ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை
 என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் நட்சத்திர
 ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டதாக கூறப்படும் திருமண வைபவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைவாக ஹோட்டல் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 30 அக்டோபர், 2020

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் பூந்தோட்டம் பிரதான வீதியில் பெண்ணொருவர் காயம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்