செவ்வாய், 1 டிசம்பர், 2020

அரசு திட்டமிட்டு வடக்கு வைத்தியசாலைகளை புறக்கணிக்கிறது. வினோ


அரசியல் காரணங்களுக்காகவும், மாகாண சபைக்கு கீழான நிர்வாகத்தில் இருப்பதாலும் வடக்கு வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில்.01-12-20. இன்று  இதனை 
தெரிவித்தார். மேலும்,
“வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசினால் 350 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விபத்து 
சிகிச்சை பிரிவிற்கான அதி நவீன கட்டிடப் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை.
33 மாடிகளைக் கொண்ட அச்சிகிச்சைப் பிரிவின் கீழ்தளம் மட்டும் முடிவுற்ற நிலையில் அவசர அவசரமாக கடந்த
 வருடம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அவசர சிகிச்சைப் பிரிவிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மீதி நிதிக்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மாகாண சபைக்கு
 கீழான நிர்வாகத்தில் இருப்பதனாலும் அரசியல் காரணங்களுக்காகவும் திட்டமிட்டே இந்நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதாகவே 
நாம் கருதுகின்றோம்.
இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களை சொல்லிக்கொண்டிருப்பதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மேல் தள வேலைகள் முடிவுறுத்தப்படாதமையினால் கீழ்தளத்துக்கு நீர் கசிவு கூட ஏற்பட்டு 
நோயாளிகளை சீராக பராமரிக்கவோ, சிகிச்சையளிக்கவோ முடியாதுள்ளது. எனவே 350 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கான மிகுதி நிதியை சுகாதார அமைச்சர் உடனடியாக விடுவித்து இரண்டாம் கட்ட கடுமான ப்பணிகளை நிறைவ செய்து தர வேண்டும்.
அது மட்டுமன்றி வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையும் சட்ட வைத்திய அதிகாரி அறையும் மிகவும் பாழடைந்த நிலையிலேயே உள்ளன. இவற்றை நவீனப்படுத்த மத்திய 
அரசிடம் நிதிக்கான கோரிக்கைகள் தொடர்ந்தும் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை.
 இதற்கு தேவையான அண்ணளவு 
மதிப்பீடான 120 மில்லியன் ரூபா நிதியினை வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாகாண பொது சுகாதார ஆய்வு கூடத்துக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டத்துக்கான நிதியையும் விடுவித்துக்கொடுக்க வழியேற்படுத்த வேண்டும். வவுனியாவிலுள்ள
 பிரதேச வைத்தியசாலைகளான 
பூவரசங்குளம், நெடுங்கேணி, செட்டிகுளம் வைத்தியசாலைகளில் உட்கட்டுமான அபிவிருத்திகளையும் அடுத்த 
ஆண்டில் செய்து கொடுக்க நிதி ஒத்துக்குமாறும் சுகாதார அமைச்சரைக் கோருகின்றேன். வடக்கு மாகாண நிர்வாகத்துக்குரிய வைத்தியசாலைகள் என்பதனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டாம் எனவும் கோருகின்றேன்.
இதேவேளை சுகாதாரத்துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு உள்ளது. மாவட்ட வைத்தியசாலையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் கூட இங்குள்ள
 மாவட்ட வைத்தியசாலைக்கு கிடையாது. அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இல்லாத ஒரு மாவட்ட வைத்தியசாலையாகவே
 இது உள்ளது.
பொது மருத்துவ சிகிச்சைப்பிரிவில் குறைந்த பட்சம் 6 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே நிரந்தர சேவையில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 60 வைத்திய அதிகாரிகளில் 32 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான 
மருத்துவ ஆளணி 129 ஆக இருக்கின்ற நிலையில் 71 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். வைத்திய நிபுணர்களுக்கான 
அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 18 ஆக இருக்கின்றபோதும் 8 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே
 இருக்கின்றார்.
குழந்தை வைத்திய நிபுணர்கள் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் எவருமே இல்லாதுள்ளனர். மகப்பேற்று நிபுணர், சத்திரசிகிச்சை நிபுணர், கதிரியக்க நிபுணர்கள் இல்லை. போதிய அம்புலன்ஸ்களும் இல்லை. இதே நிலைதான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும் உள்ளது.
2013ம் ஆண்டின் பின்னர் ஆளணி மீளாய்வு
 செய்யப்படவில்லை. வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆளணி மீளாய்வு செய்து அனுப்பிய போதும் சுகாதார
 அமைச்சு கவனம் எடுக்கவில்லை. அரசியலில் ஈடுபட்ட வைத்தியர்கள் பலர் இன்று அரசியலிலும் இல்லை வைத்தியத்துறையிலும் இல்லை .இவ்வாறானவர்களை மீளவும் வைத்திய சேவையில் இணைப்பதன் மூலம் வெற்றிடங்களை நிரப்ப முடியும்” – என்றார்¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக