வெள்ளி, 26 நவம்பர், 2021

இலங்கைக் காவல் துறையை தாக்கிய ஆறு பேர் சிக்கினர்

சிறிலங்கா  காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல் துறை உத்தியோகத்தர்கள் குழுவை சந்தேகநபர்கள்
 தாக்கியுள்ளனர்.
இதில் காவல் துறை  அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய காவல் துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாககாவல் துறையினர் 
தெரிவித்தனர்.
இதற்கமைவாக, ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

சனி, 13 நவம்பர், 2021

நாட்டில் பண்டையகாலத் தொல் பொருட்களை வைத்திருந்தவர் கைது

நாட்டில் பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய 12-11-2021. வெள்ளிக்கிழமை அன்று மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பகீரதன் தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாண்டியடிப் பகுதியை சேர்ந்தவர் எனவும் 19 வயது மதிக்கத்தக்க இச்சந்தேக நபரிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பொருட்கள் பல 
மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 26 ஆகஸ்ட், 2021

நாட்டில் பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு.

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல, அந்த விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர 
இதனை தெரிவித்தார்.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்காது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இதே நிலைதான் உள்ளது. சீனிக்கான வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. பால்மாவுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது. எரிவாயு மீதான வரி இப்போது நீக்கப்பட்டுள்ளது . தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக அரசாங்க வருவாய் மிக வேகமாக 
குறைந்துள்ளது.
னால் இந்த யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தற்போது சீனி, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதோடு பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளமை
 குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>





புதன், 25 ஆகஸ்ட், 2021

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 வீதத்தினால் உயர்வு

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்க்ணடவாறு
 குறிப்பிட்டார்.
நாட்டில் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் ரில்லியன் கணக்கான நாணயத்தை அச்சிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 8 ஜூன், 2021

நாட்டில் மாணவர்களுக்காக இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்

நாட்டில் மாணவர்களுக்காக இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்புதன் ஜூன் 09, 2021
பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த புதிய மென்பொருளானது, நிகழ்நிலை (Zoom) மென்பொருளைப் போன்றது என்றும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ 
இவ்வாறு தெரிவித்தார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 25 மே, 2021

சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படையணி யாழில்

 யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் பெண்கள் படையணி களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமான பயணத் தடை அமுல்படுத்தப்பட்டு 
வருகிறது.
இந்த நிலையில்,25-05-2021 இன்றைய தினம் மக்கள் பொருட் கொள்வனவு செய்வதற்காக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும் 
இராணுவத்தின் பெண்கள் மோட்டார்சைக்கிள் பிரிவு
 களமிறக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ். நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



 

சனி, 1 மே, 2021

நாட்டில் முழு ஊரடங்கு செய்தி - குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

நாட்டில் முழு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என வெளியான செய்தி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படு​ம் என்பது போலியான செய்தியாகும் அந்த போலியான செய்தி, யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரவியிருந்தது” என காவல் துறை  பேச்சாளர் பிரதி காவல் துறை   மா அதிபர் அஜித் ரோஹன 
தெரிவித்தார்.
அந்தப் போலியான செய்தியில், முழு ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 30ஆம் திகதி நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டு, மே மாதம் 17ஆம் திகதிவரையிலும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலியான செய்தியால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது



நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதுக்குடியிருப்பில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு காவல் துறையால்.01-05-2021. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்தும் வங்கி வைப்புக்களில் இருந்து சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுன் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில்
 தெரிய வந்துள்ளது.
குறித்த குற்றச்செயல்களில் பிரதான சூத்திரதாரி வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்தவராவார்.
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்புடையவர் எனவும் 
தெரிய வருகிறது.
சந்தேகநபரின் மனைவி, மருமகன், புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவருடைய அக்கா மற்றும் அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக 
தெரிய வந்துள்ளது.
இவர்களில் 3 ஆண்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும், அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளதோடு, கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடகு வைத்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற 8 கொள்ளை சம்பவங்களும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் சிசிரிவி காணொளி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட காவல் துறை  உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய புதுக்குடியிருப்பு காவல் துறை நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு காவல் துறை யினர்மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த ஐவரும் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் புதுக்குடியிருப்பில் 8 கொள்ளை சம்பவங்களும், கிளிநொச்சியில் 3 கொள்ளை சம்பவங்களும், யாழ்ப்பாணத்தில் 2 கொள்ளை சம்பவங்களும் மற்றும் முல்லைத்தீவில் 2 கொள்ளை சம்பவங்களும் நடாத்தப்பட்டுள்ளதாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணைகளில்
 தெரிய வந்துள்ளது.
குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவல் துறையினர்  சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 29 ஏப்ரல், 2021

நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மே 9 வரை பூட்டு

நாட்டில் எட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் தற்போதைய கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நேரடிக் கற்றல் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன என கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்கா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களுக்கு 
அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நேரடிக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில் தற்போதைய கொவிட் பரவலைக் கருத்தில் கொண்டு கலாசாலை செயல்பாடுகளை இடைநிறுத்தத்
 தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 ஏப்ரல், 2021

யாழ் உரும்பிராய் விபத்தில் 15 சிறிலங்கா இராணுவத்தினர் காயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில்.26-04-2021. இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில்  சிறிலங்கா  இராணுவத்தினர் 
காயமடைந்துள்ளனர் 
 கைதடி - மானிப்பாய் வீதி ஊடாக ; மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி வழியாக  இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர்  ரக வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
 குறித்த விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்குள்ளானது. 
 காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
 மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் காவல் துறையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 24 ஏப்ரல், 2021

புன்னாலைக்கட்டுவனி கொள்ளைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி அதிரடியாகக் கைது.

யாழில் நள்ளிரவு வேளையில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன
 கைப்பற்றப்பட்டன.
அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர்
 ஒருவரின் வீட்டுக்குள்
 சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.அந்தக் கொள்ளை உட்பட கந்தரோடை,
 நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 17 ஏப்ரல், 2021

கோப் குழு அதிருப்தி சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து

நாட்டில் சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 இதேநேரம், சுகாதாரத்துறை அபிவிருத்தி விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ஐந்து வருடங்களில் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க, 346 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.  2017ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 34 புத்தாக்க ஆய்வுத் திட்டங்களுக்காக, 399 மில்லியன் ரூபாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்தும், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தனிநபர் ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சி, திட்டங்களின் பயனற்ற தன்மைக்கு வழிவகுத்தன என்பதும் இதன்போது தெரியவந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.
 இதேநேரம், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு, 7 மாடிகளைக் கொண்ட மிலேனியம் சிகிச்சையறை தொகுதியை அமைப்பதற்கு, 398 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம், கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு
 வழங்கப்பட்டுள்ளது.
 இந்தக் கட்டடத் தொகுதியின் பணிகள், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டியபோதிலும், 2014 மார்ச் 06 ஆம் திகதி வரையில், அந்தப் பணிகள் பூர்த்திசெய்யப்படாது ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையும் கோபா குழுவில் புலப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதுவரையான காலப்பகுதியில், குறித்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்ட, 51 மில்லியன் ரூபாவை மீளப்பெற முடியாமல் போனமை குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு விசேட கவனம் செலுத்தியது. இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அந்தக் குழு பணிப்புரை வழங்கியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வடமராட்சியில் அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

வடமராட்சியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில்.16-04-2021. இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.என 
தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள்

 கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை காவல் துறை  தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது.
 www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என காவல் துறை  தலைமையகம்.13-04-2021.
 இன்று அறிவித்தது.
;இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப் பெற்று, ; காவல் துறை ; இணையத் தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ; திருட்டு போன தொலைபேசிகளின் EMI இலக்கங்களுடன் ஒப்பீடு செய்து  தகவல்களை உறுதி செய்துகொள்ளுமாறு காவல் துறையை  பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
அவ்வாறு ஒப்பீடு செய்வதன் ஊடாக தான் கொள்வனவு செய்யும் தொலைபேசி சிக்கலுக்கு உரியதல்ல என்பதை ; ஒருவர் உறுதி செய்துகொள்ள கூடியதாக இருக்கும் என காவல் துறையினர் 
கூறுகின்றனர்.
 திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள ; நிலையிலேயே, காவல் துறையினர் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொது மக்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

 

சனி, 3 ஏப்ரல், 2021

புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் தர்மபுரத்தில் இருவர் கைது!!

இந்த நிலையில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து
 02-04-2021.அன்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் 
முன்னெடுத்த வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 31 மார்ச், 2021

யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், 
30-03-2021.அன்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் 
பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 24 மார்ச், 2021

நாட்டில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் 
24-03-2021.இன்று தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று (23) கிடைத்திருப்பதாகவும்
 அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதிலும் அனைத்த பாடசாலைகளின் 
கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் 
பதிலளித்தார்.
இதற்கு மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் 
தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்திரை விடுமுறைக்கு பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட தர வகுப்பு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலைக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் குறிப்பிடுகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 22 மார்ச், 2021

பெல்மடுல்லவில் 80 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் பொலிஸாரால் கைது

பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, காரணம் என்ன என்பதை குறித்த பெண் வெளியிடவில்லை
 எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவர் 80 இலட்சத்து 31ஆயிரம் பணத்துடன் பயணம் செய்ததாகவும், இந்த பணம் எவ்வாறு 
கிடைத்தது 
என்பதை அவர் கூறவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>







வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு விலையை அதிகரிக்க தேவை இல்லை

நாட்டில்  சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என  சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 
                                தெரிவித்துள்ளார்.                                       
அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் நேற்று (17)  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 10 மார்ச், 2021

ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..யாழ் விவசாயிகளுக்கு

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது உருளைக்கிழங்கு அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து, உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஷ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை 
விடுத்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண உருளைக்கிழங்குகளுக்கு தென்னிலங்கை மக்களிடம் சிறந்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய உருளைக்கிழங்குகளைவிட, யாழ்ப்பாண உருளைக்கிழங்கின் வாசமும் சுவையும் அலாதியானது என்றும் அரசின் பிரதானி ஒருவர் 
குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





சனி, 27 பிப்ரவரி, 2021

பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் பாதுகாப்பான முகக் கவசத்தை தயாரித்து அசத்தல்

உலகளாவிய ரீதியில் மிகவும் பாதுகாப்பான கோவிட் முகக் கவசம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பேராதனை பல்கலைகழக நிபுணர்களினால் கோவிட் வைரஸ் தொற்றை அழிக்கும் விசேட முகக் கவசம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை,26-02-2021 அன்று  இடம்பெற்றுள்ளது.இதுவரையில் உலகில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை விடவும் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இந்த முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த முகக் கவசம் 3 அடுக்குகளாலானது என இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட போராதனை
 பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காமினி 
ராஜபக்ஷ ரெிவித்துள்ளார்.அந்த முகக் கவசத்தின் முதல் அடுக்கில் உமிழ்நீர் போன்ற திரவங்களை உடனடியாக நீக்குகிறது, அதே
 நேரத்தில் இரண்டாவது அடுக்கில் உள்ள ஒரு சிறப்பு இரசாயனம் உள்வரும்
 வைரஸை ஒருவிதத்தில் அழிக்கிறது மற்றும் மூன்றாவது அடுக்கு நீர்த்துளிகளை ஆவியாக்குகிறது என 
பேராசிரியர் வி
ளக்கியுள்ளார்.அத்துடன் இந்த முகக் கவசத்தை 25 முறை கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.தற்போது இலங்கையில் 
பயன்பாட்டில் உள்ள KN 95 முகக் கவசத்தை விடவும் இது மிகவும் பாதுகாப்பான குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முகக் கவசத்தினால் 99% வைரஸ்கள் அழிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் மருத்துவ பீடம் நடத்திய ஆய்விற்கமைய 
தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 18 பிப்ரவரி, 2021

தூதுவர்கள் வடக்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தூதர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர் தற்போது சுவிஸ் தூதர் வருகை தந்துள்ள நிலையில் அடுத்து அமெரிக்கா,கனடாவென படையெடுப்புக்கள்
 தொடரவுள்ளது.
இதனிடையே தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு என சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினராம்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சுவிஸ்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலர், நல்லை ஆதீனத்துக்கு 17-02-2021,அன்று  மாலை சென்றிருந்தார்.
நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத்தைச் சேர்ந்த கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர், கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் ஆகியோர் சுவிஸ்சர்லாந்து தூதுவரைச் 
சந்தித்தனர்.
55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ள சுவிஸ்சர்லாந்துக்கு நன்றிகள் தெரிவிக்கின்றோம். அவர்கள் தமது மத வழிபாடுகளுக்கு ஆலயங்களை அமைக்க அனுமதித்துள்ளமையும் 
பாராட்டுக்குரியது.
அதேபோன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் சகல உரிமைகளையும் கிடைக்க சுவிஸ்சர்லாந்து ஒத்துழைக்கவேண்டும் என்றும் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியதாக
 தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>