திங்கள், 2 நவம்பர், 2020

நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் மக்களின் சுகாதார விதி மீறல் குறித்து கோரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் இரு முக்கிய சந்தைகளான திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பொது சந்தைகள் முடக்கப்பட்ட பின்னரும் வீதியோரங்களில் மரக்கறி மற்றும் மீன் வியாபாரங்களில் ஈடுபடும் வியாபார இடங்களில் மக்கள் சமூக இடைவெளிகள் எதுவும்
 இல்லாது முண்டியடிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதுசுதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,“இச்செயற்பாட்டை தவிர்க்குமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபாரங்களினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம், அவ்வாறு சுகாதார நடைமுறைகளினை
 பின்பற்றாத வியாபரிகள் வியாபரத்திற்கு சபை உடனடி தடை விதிக்கும் என்பதனையும் தெரியப்படுத்துகிறோம்.” என்றும் அந்த உறுப்பினர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக