திங்கள், 9 நவம்பர், 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு காய்ச்சியவர்கள் மடக்கிப்பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, மதுபான விற்பனையில் ஈடுபட்ட 15பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி 
எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
போதையற்ற நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் பல்வேறு சுற்றிவளைப்புகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
நேற்று (8) மாலை வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெருமளவு கோடா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கிரான், கச்சக்கொடி, களுவண்கேணி, வாழைச்சேனை, செட்டிபாளையம் பகுதியில் கசிப்பு விற்பனை,
சட்ட விரோத கள் விற்பனை
 மற்றும் கசிப்பு உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 14 பேர் கைதுசெய்யப்பட்டு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக     எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக