ஞாயிறு, 13 டிசம்பர், 2020

இபலோகம விஜிதபுர கோட்டை மதிலுக்கு சேதம் 10 பேர் கைது

அநுராதபுரம் – இபலோகம விஜிதபுற கோட்டை இருந்ததாக கருதப்படும் தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.
பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுத்தமையினால், அங்கிருந்த தொல்பொருள் பகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இபலோகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அழகப்பெருமாகமயில் உள்ள பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக இந்த மதில் கட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொல்பொருள் தொகுதிக்கு 
சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுள் பள்ளிவாசலின் தலைவரும் அடங்குவதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக