வெள்ளி, 29 செப்டம்பர், 2023

முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது

யாழில் நவற்கிரி புத்தூரை சேந்தவரின்  முச்சக்கரவண்டி 
 28-09-2023.வியாழக்கிழமை  அன்று  மரத்தின் கீழ் நிழலுக்காக  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது  என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளரான சாரதிக்கு  முகத்திலும் நென்சிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது   என முச்சக்கரவண்டிஉரிமையாளர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 7 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி

யாழ் போதனா வைத்தியசாலையில்  8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண 
தடை விதித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு 
உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது.
தாதிக்கு பயணத்தடை
அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் , பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.
அதனை தொடர்ந்து வியாழக்கிழமை (07) யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>