செவ்வாய், 25 ஜனவரி, 2022

யாழ் மக்கள் கடும் பீதியில் பொலிசாரினால் கைப்பற்றபட்ட ஆபத்தான பொருட்கள்

யாழில் மறைந்துவைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்தான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மானிப்பாய் வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே இவ்வாறு வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் அவை மீட்கப்பட்டுள்ளது. எனினும் இவற்ருடன் தொடர்புடைய கும்பல் இன்னும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 இதனால் யாழ் மக்கள் ஒரு
வித அச்சத்துடன் காணப்படுகின்றனர்.இதன்போது 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளபோதும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>