வெள்ளி, 18 டிசம்பர், 2020

கிண்ணியாவில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கல்முனை கடற்கரையில் தலைமறைவாகியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு...

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கொழும்பில் பல பகுதிகள் முடக்கம் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு, கிரான்பாஸ் சிறிசந்த செவன வீடமைப்பு பகுதி, கிரான்பாஸ் சிறிமுது உயன, மாளிகாவத்தை லஹிரு செவன வீடமைப்பு பகுதி, பொரளை சிறிசர உயன ஆகிய பகுதிகளில்.14-12-20. நாளை அதிகாலை முதல் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, கொழும்பின் ஏனைய 17 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், வெள்ளவத்தை மயூரா ப்ளேஸ் பகுதி.14-12-20. நாளை அதிகாலை முதல் முடக்கப்படவுள்ளது.கம்பஹா – வத்தளை பொலிஸ் பகுதியில், ‘கெரவலப்பிட்டி, ஹெக்கித்த, குருந்துஹேன, எவெரிவத்தை,...

இபலோகம விஜிதபுர கோட்டை மதிலுக்கு சேதம் 10 பேர் கைது

அநுராதபுரம் – இபலோகம விஜிதபுற கோட்டை இருந்ததாக கருதப்படும் தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுத்தமையினால்,...

வியாழன், 3 டிசம்பர், 2020

தற்போதுவரை யாழில் எட்டாயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுவரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.03-12-20.இன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் சூம் தொழில்நுட்பம் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.கலந்துரையாடலின் பின்பு...

செவ்வாய், 1 டிசம்பர், 2020

இலங்கை போர்குற்றம் தொடர்பான பிரித்தானிய கூலிப்படையின் விசாரணை ஆரம்பம்

பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை நிறுவனம் 1980ம் ஆண்டு கூலிப்படையாக வந்து இலங்கையில் புரிந்த போர் குற்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய மெட்ரோபோலிரன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கீனி மீனி சேவையின் படைகள் 1980ம் ஆண்டு தமிழ் இயக்கங்களுக்கு எதிராக போரிட இலங்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு இராணுவ பயிற்சியளித்தது.அக்காலப்பகுதியில் அதிரடிப்படையினர் தமிழர்கள் பலரை படுகொலை செய்தனர்.இந்நிலையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

அரசு திட்டமிட்டு வடக்கு வைத்தியசாலைகளை புறக்கணிக்கிறது. வினோ

அரசியல் காரணங்களுக்காகவும், மாகாண சபைக்கு கீழான நிர்வாகத்தில் இருப்பதாலும் வடக்கு வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றில்.01-12-20. இன்று  இதனை தெரிவித்தார். மேலும்,“வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசினால் 350 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும்...

சனி, 28 நவம்பர், 2020

வெதுப்பகமும் ஒரு புடவை வியாபார நிலையம் யாழில் முடக்கம்

யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.இந்நிலையில் தொடர்ச்சியான நடவடிக்கையாக யாழ்ப்பாணம்...

வெள்ளி, 27 நவம்பர், 2020

புத்தளத்தில் 1067 கிலோ மஞ்சள் புத்தளத்தில் மீட்பு

கடற்படையால் புத்தளத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 25-11-20.அன்று. 1067kg எடையுள்ள உலர்ந்த மஞ்சள் மற்றும், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம்-மன்னார் சாலையில் உள்ள 02 வது மைல் கல்லில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, வடமேற்கு கடற்படை கட்டளை இந்த பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த உலர்ந்த மஞ்சளை கண்டுபிடிக்க முடிந்தது. 1067 கிலோ எடையுள்ள...

செவ்வாய், 24 நவம்பர், 2020

கம்பஹா வத்தளையில் ஆலய வீதி வீட்டுத் தொகுதி முடக்கம்

கம்பஹா – வத்தளை ஆலய வீதிப் பகுதியில் உள்ள தொழிலாளர் வீட்டுத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.அங்கு 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வெள்ளி, 20 நவம்பர், 2020

சட்டத்தரணிகளுக்கு எதிராக யாழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித்துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அதனால் இந்த வழக்கை குப்பைத் தொட்டியில் மன்று போட வேண்டும் அல்லது வழக்குத் தொடுனர் அதனை மீளப்பெறவேண்டும்”இவ்வாறு பொலிஸாரால் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட சட்டத்தரணிகளில் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான்...

செவ்வாய், 17 நவம்பர், 2020

சஜித்தணி எம்பி மீன்களை வாங்க வலியுறுத்தி பச்சையாக கடித்தார்

நாட்டில் கொரோனா தொடர்பான அச்சம் இல்லாமல் மீன்களை மக்கள் வாங்க வேண்டுமென ஊடக சந்திப்பில் தெரிவித்த, சஜித்தணி எம்பியும் முன்னாள் மீன்பிடி இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதாராச்சி மீன் ஒன்றை பச்சையாக கடித்து காண்பித்தார்  சஜித்தணி எம்பி நிலாவரை.கொம் செய்திகள் >>>...

நாட்டில் உத்தரவை மீறிய 95 பேர் ட்ரோன்களின் கண்காணிப்பால் கைது

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம் ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமை உத்தரவை மீறிய 95 பேர்.17-11-20. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ட்ரோன்களின் விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

ஞாயிறு, 15 நவம்பர், 2020

யாழ் வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி

 வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி1,குகதாசன் விதுசாந் 1942,வரதீஸ்வரன் அபிராமி 1843ம்,கேதீஸ்வரன் துஷாரா 1814.உமாகாந்தன் பிறேமகாந் 1805,பகீரதன் டர்சிகா 1806,செல்வகஜானன் பிரசாயினி 1737,உதயரூபன் பிரவீனா 1718,விஷ்வநாதன் அபிசேகா 1689,புவனேந்திரன் கிஷானா 16210,ஸ்ரீசங்கர் அபிஷா 162அனைத்து மாணவர்களுக்கும் 7இந்த இணையத்தின்  வாழ்த்துக்கள் நிலாவரை.கொம்...

சனி, 14 நவம்பர், 2020

அனைவர்க்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்14.11.20

 உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்..மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய.உலக தமிழ் அனைத்து என் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள் அனைவர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம் .நிலாவரை.கொம் இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம்...

புதன், 11 நவம்பர், 2020

இம்பசிட்டி பகுதியில் 3கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

யாழ்  பருத்தித்துறை இம்பசிட்டி பகுதியில்   கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் 11-11-20..இன்று மாலை  சந்தேக நபர் ஒருவர் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 335 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

நாட்டில் திடீரென அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்கள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.இதன்படி ஆகக்குறைந்த கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.பஸ்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறினார் நிலாவரை.கொம் செய்திகள் >>>&...

நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மறியல்

யாழ் தென்மராட்சி – கரம்பகத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும் விடுதி உரிமையாளரையும் எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், குறித்த பெண்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

திங்கள், 9 நவம்பர், 2020

நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்க -கல்வி அமைச்சு ஆலோசனை

நாட்டில் எதிர்வரும் 27ம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு காய்ச்சியவர்கள் மடக்கிப்பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, மதுபான விற்பனையில் ஈடுபட்ட 15பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.போதையற்ற நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் பல்வேறு சுற்றிவளைப்புகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.நேற்று...

புதன், 4 நவம்பர், 2020

சுதுவெல்ல பகுதியில் ஊரடங்கு அமுலில் உள்ள இரவு நேரத்தில் வீடொன்றில் நடந்த கூத்து

இலங்கையில் ஜா-எல – சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள பகுதியில் மதுபான விருந்தொன்று இடம்பெற்றுள்ளது.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள ஜா-எல – சுதுவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலே இந்த மதுபான விருந்து நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த மதுபான விருந்தில் ஈடுபட்டிருந்த 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை...

செவ்வாய், 3 நவம்பர், 2020

மொனராகலை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் கைதி பலி

மொனராகலை சிறைச்சாலையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையில்03-11-20. இன்று மதியம் ஏற்பட்ட மோதலில் மெஸ்ஸா என அழைக்கப்படும் கைதி கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றனகைதிகளுக்கு இடையிலான மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் ஒரு அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் காரணமாக சிறை கைதிகளுக்கு மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...

திங்கள், 2 நவம்பர், 2020

நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் மக்களின் சுகாதார விதி மீறல் குறித்து கோரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் இரு முக்கிய சந்தைகளான திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பொது சந்தைகள் முடக்கப்பட்ட பின்னரும் வீதியோரங்களில் மரக்கறி மற்றும் மீன் வியாபாரங்களில் ஈடுபடும் வியாபார இடங்களில் மக்கள் சமூக இடைவெளிகள் எதுவும் இல்லாது முண்டியடிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதுசுதன் தெரிவித்துள்ளார்.அத்துடன்,“இச்செயற்பாட்டை தவிர்க்குமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபாரங்களினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்,...

சனி, 31 அக்டோபர், 2020

நாட்டில் திருமண வைபவங்களை நடத்தலாமா பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கம்

மேல் மாகாணத்திற்கு வெளியே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருமண வைபவங்களை நடத்த முடியும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, தனிமைப்படுத்தல்...

வெள்ளி, 30 அக்டோபர், 2020

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் பூந்தோட்டம் பிரதான வீதியில் பெண்ணொருவர் காயம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பாக வவுனியா...