வியாழன், 29 ஏப்ரல், 2021

நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மே 9 வரை பூட்டு

நாட்டில் எட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் தற்போதைய கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நேரடிக் கற்றல் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன என கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்கா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களுக்கு 
அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நேரடிக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில் தற்போதைய கொவிட் பரவலைக் கருத்தில் கொண்டு கலாசாலை செயல்பாடுகளை இடைநிறுத்தத்
 தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக