செவ்வாய், 25 மே, 2021

சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படையணி யாழில்

 யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் பெண்கள் படையணி களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமான பயணத் தடை அமுல்படுத்தப்பட்டு 
வருகிறது.
இந்த நிலையில்,25-05-2021 இன்றைய தினம் மக்கள் பொருட் கொள்வனவு செய்வதற்காக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும் 
இராணுவத்தின் பெண்கள் மோட்டார்சைக்கிள் பிரிவு
 களமிறக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ். நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக