வியாழன், 18 பிப்ரவரி, 2021

தூதுவர்கள் வடக்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தூதர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர் தற்போது சுவிஸ் தூதர் வருகை தந்துள்ள நிலையில் அடுத்து அமெரிக்கா,கனடாவென படையெடுப்புக்கள்
 தொடரவுள்ளது.
இதனிடையே தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு என சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினராம்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சுவிஸ்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலர், நல்லை ஆதீனத்துக்கு 17-02-2021,அன்று  மாலை சென்றிருந்தார்.
நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத்தைச் சேர்ந்த கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர், கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் ஆகியோர் சுவிஸ்சர்லாந்து தூதுவரைச் 
சந்தித்தனர்.
55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ள சுவிஸ்சர்லாந்துக்கு நன்றிகள் தெரிவிக்கின்றோம். அவர்கள் தமது மத வழிபாடுகளுக்கு ஆலயங்களை அமைக்க அனுமதித்துள்ளமையும் 
பாராட்டுக்குரியது.
அதேபோன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் சகல உரிமைகளையும் கிடைக்க சுவிஸ்சர்லாந்து ஒத்துழைக்கவேண்டும் என்றும் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியதாக
 தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக