ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் ஒன்றுகூடிய: காரணம் என்ன

யாழில் ஒன்றிணைந்த அனைத்துக் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது
 தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்வில்லை என்பதுவும்
 குறிப்பிடதக்கது . 
  தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும், நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறித்த ; கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக அறிய 
முடிகின்றது.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக