செவ்வாய், 27 அக்டோபர், 2020

குறண பிரதேசத்தில் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு – குறண பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 1 கிலோ 60 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் நீர்கொழும்பு பிராந்திய குற்ற புலனாய்வுப்பிரிவு பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
கெப்பட்டிபொல மாவத்தை, மேஜர் ராஜ மைதானத்திற்கு அருகில் வைத்து கேடிஎச் வான் ஒன்றில் பயணம் செய்தபோதே குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் குறண கெப்பட்டிபொல பிரதேசத்தில் அதிசொகுசு வீடொன்றில் ஹெராேயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக