புதன், 9 பிப்ரவரி, 2022

பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் சந்தேக நபர் கைது

அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பிரதான சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி மீது , சம்பவ தினத்தன்று சந்தேக நபர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து அம்புலன்ஸ் சாரதியை சுட முயற்சித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இதுவரை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக