வியாழன், 29 ஏப்ரல், 2021

நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மே 9 வரை பூட்டு

நாட்டில் எட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் தற்போதைய கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நேரடிக் கற்றல் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன என கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்கா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நேரடிக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில் தற்போதைய கொவிட் பரவலைக் கருத்தில்...

திங்கள், 26 ஏப்ரல், 2021

யாழ் உரும்பிராய் விபத்தில் 15 சிறிலங்கா இராணுவத்தினர் காயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில்.26-04-2021. இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில்  சிறிலங்கா  இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்  கைதடி - மானிப்பாய் வீதி ஊடாக ; மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி வழியாக  இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர்  ரக வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.  குறித்த விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின்...

சனி, 24 ஏப்ரல், 2021

புன்னாலைக்கட்டுவனி கொள்ளைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி அதிரடியாகக் கைது.

யாழில் நள்ளிரவு வேளையில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின்...

சனி, 17 ஏப்ரல், 2021

கோப் குழு அதிருப்தி சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து

நாட்டில் சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், சுகாதாரத்துறை...

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வடமராட்சியில் அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

வடமராட்சியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில்.16-04-2021. இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.என தெரிவிக்கப்படுகிறது. நிலாவரை.கொம்...

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள்

  கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை காவல் துறை  தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது. www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என காவல் துறை  தலைமையகம்.13-04-2021. இன்று அறிவித்தது.;இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப்...

சனி, 3 ஏப்ரல், 2021

புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் தர்மபுரத்தில் இருவர் கைது!!

இந்த நிலையில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து 02-04-2021.அன்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை...