ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தனது நட்பு நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியை சிறிலங்கா ஆரம்பித்தது

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை சிறிலங்கா  புதன்கிழமை சமர்ப்பிக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த இலங்கை அரசாஙகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கும் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் இதுவரை நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் குறித்தும் அரசாங்கம் பதிலளிக்கும் எனவும்
 தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கு நட்புநாடுகளையும் ஒத்த நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளையும் கேட்டுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆனால் நாங்கள் இது குறித்த இன்னமும் முடிவெடுக்கவில்லை புதிய தீர்மானம் கிடைப்பதற்காக காத்திருக்கின்றோம் என அவர் 
தெரிவிததுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக