வெள்ளி, 4 அக்டோபர், 2024

நாட்டில் பல வாகனகள் மாயம்: விசாரணைகளுக்கு ஒருமாதம் கால அவகாசம்

நாட்டில் ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.
 ஒவ்வொரு நிறுவனம் தொடர்பான அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்படும்.

 தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த வாரம் இந்த விசாரணைகளை ஆரம்பித்தது. 
தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு 
உள்ளாகியுள்ளனர்.
 மேலும், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத வாகனங்களை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் முறையான
 நடைமுறையின்றி வாகனங்களை
 ஏற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

 இலங்கையில்கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என
 கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன
 தெரிவித்தார்.
 புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, 
முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.
 இந்தப் பின்னணியில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் புலிகளுடன் தொடர்புப்பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வேன் - ரணில் உறுதி

நாட்டில் புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை 
மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை 
முன்னெடுக்க உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  
மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17.09) மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன்.மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய சக்தி. 
அதை நாம் முழுமையாக பயண்படுத்துவோம்..மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்' 'மன்னார் கடலில் இருந்து நல்ல காற்று வீசுகிறது. அதையும் பயண்படுத்துவோம் .
 அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது.'இங்கு வாழும் தமிழ்,சிங்கள முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம். மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி 
வாழ முடியும் .சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம். '
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம். மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். கமத் தொழிலை ஊக்குவிப்போம்.
இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். 
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜாங்க 
அமைச்சர்களான காதர் மஸ்தான்,சுரேன் ராகவன்,பாராளுமன்ற உறுப்பினர்களான கே.திலீபன், முஷராப்,முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து 
கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 13 அக்டோபர், 2023

உங்கள் அனைவரிடமும் முக்கியமாக இருக்க வேண்டிய நாட்டின் தொலைபேசி இலக்கங்கள்

நாட்டு மக்கள் அனைவரிடமும் முக்கியமாக  இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்
● பிரதமர் – 011-2321406

● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171

● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110

● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938

● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919

● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939

● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984

● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962

● கல்வி அமைச்சு – 1988

● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905

● IMEI மீளாய்வு அலகு – 1909

● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918

● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996

● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984

● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977

● மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956

● உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666

● சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545

● சிறுவர் துஸ்பிரயோகம் – 1929

● பரீட்சை திணைக்களம் – 1911

● உயர்கல்வி அமைச்சு – 1918

● தேசிய உதவி மையம் – 118

● போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111

● குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799

● செஞ்சிலுவை – 011-2672727

● தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110

● இராணுவ தலைமையகம் – 011-2432682

● வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646

● குற்றப்பிரிவு – 011-2691500

● பொலிஸ் தலைமையகம் – 011-2421111

● மின்சார தடை – 011-2466660, 011-4617575

● அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052

● தொலைபேசி இணைப்பு – 112

● தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935

● விபத்து பிரிவு – 011-2693184

● சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744

● மோசடி பணியகம் – 0112583512

● சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618

● கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111

● செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505

● மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606

● இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910

● விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920

● அவசர அதிவேக பிரிவு – 1969

● இலங்கை மின்சார சபை – 1987

● தேசிய வைத்தியசாலை – 1959

● தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966

● வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968

● தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900

● புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052

● கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215


வெள்ளி, 29 செப்டம்பர், 2023

முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது

யாழில் நவற்கிரி புத்தூரை சேந்தவரின்  முச்சக்கரவண்டி 
 28-09-2023.வியாழக்கிழமை  அன்று  மரத்தின் கீழ் நிழலுக்காக  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது  என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளரான சாரதிக்கு  முகத்திலும் நென்சிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது   என முச்சக்கரவண்டிஉரிமையாளர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 7 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி

யாழ் போதனா வைத்தியசாலையில்  8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண 
தடை விதித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு 
உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது.
தாதிக்கு பயணத்தடை
அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் , பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.
அதனை தொடர்ந்து வியாழக்கிழமை (07) யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 27 பிப்ரவரி, 2023

வடக்கில் தென்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வெளியான அதிர்ச்சி செய்தி

 

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.இது 
தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவானோர் தெரிவு செய்யப்பட்டிருக்கவேண்டிய நிலையில், அப்போதைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டால் குறைந்தளவானோரே தெரிவாகியிருந்தனர்.
இவர்களில் 100 பேர் வரையில் தற்போது வடக்கு மாகாணசபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் ஆயிரத்து 200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த வெற்றிடங்களுக்கு, ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து ஆயிரத்து 100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாணசபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை இங்கு நியமிக்க முயற்சிக்கப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>